Friday, March 27, 2009

பெண்ணே !
சிரித்தது நீ தானே ?
நான் ஏன் பைத்தியம் ஆனேன் ?????????


பால் வாங்கப் பணமின்றிக்
கள்ளிப்பால் கொடுத்தாய்!
நவமணிகள் போட முடியாமல்
தொண்டை அறுபட்டுச் சாக
நெல்மணிகள் போட்டாய்!
பலமுறை உருவெடுத்தேன்
உன் கருவில்!
ஒரு முறையாவது பிழைப்பேன்
என்ற நம்பிக்கையில்!
உனக்கும் அலுக்கவில்லை
என்னை அழிக்க!
கள்ளி பாலில் இருந்து தப்பிக்க
நான் என்ன கடவுளின் குழந்தையா?
உன்னால் பெற்றெடுக்கப்
பட்டவள் தானே அம்மா!!!

நிலவோடு நிலவாக நானும் தேய்கிறேன்
தினம் ஜன்னல் ஓரத்தில்
நிலவை ரசிக்க அல்ல
நிலவை ரசிக்கும் என்னவளை ரசிக்க!!!!!!!
என் கன்னத்தை அடிக்கடி
தொட்டு பார்க்க உனக்கு மட்டும்
ஏன் இத்தனை ஆர்வம்
என் கண்ணீர் துளியே!!!!!!
கல்யாண விருந்து தான்
ஆனாலும்
கை நனைக்க முடியவில்லை
கண்கள் நனைந்தன........
காதலியின் திருமணம்......