பெண்ணே !
சிரித்தது நீ தானே ?
நான் ஏன் பைத்தியம் ஆனேன் ?????????
Friday, March 27, 2009
பால் வாங்கப் பணமின்றிக்
கள்ளிப்பால் கொடுத்தாய்!
நவமணிகள் போட முடியாமல்
தொண்டை அறுபட்டுச் சாக
நெல்மணிகள் போட்டாய்!
பலமுறை உருவெடுத்தேன்
உன் கருவில்!
ஒரு முறையாவது பிழைப்பேன்
என்ற நம்பிக்கையில்!
உனக்கும் அலுக்கவில்லை
என்னை அழிக்க!
கள்ளி பாலில் இருந்து தப்பிக்க
நான் என்ன கடவுளின் குழந்தையா?
உன்னால் பெற்றெடுக்கப்
பட்டவள் தானே அம்மா!!!
Subscribe to:
Posts (Atom)